search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவர் குடிப்பழக்கம்"

    கணவரின் குடிப்பழக்கத்தால் வேதனை அடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் எடையூர் கிராமம் மேலபாண்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி.

    இவர்களுக்கு 2½ வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. செந்தில்குமார் தினமும் வீட்டிற்கு குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்றும் செந்தில்குமார் குடித்துவிட்டு வந்ததை தமிழ்செல்வி கண்டித்ததால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த தமிழ்ச்செல்வி மண்எண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தாராம். உடன் தமிழ்ச்செல்வியை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார்.

    இது குறித்த தகவலின் பேரில் எடையூர் இன்ஸ்பெக்டர் சிவதாஸ் மருத்துவமனையில் தமிழ்ச்செல்வியிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சேலம் அருகே கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த இளம்பெண் குழந்தையுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொண்டார்.
    கொண்டலாம்பட்டி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி பைபாஸ் ரோட்டில் உள்ள  மஞ்சக்கல்பட்டி, சிவா பாலிமேடு இறக்கம் கள்ளுக்கடை பகுதியில் வசித்து வருபவர் செல்வம் (வயது 35). கூலி தொழிலாளி. இவரது மனைவி அன்புக்கரசி (31). இவர்களுக்கு கனிஷ்கா(4) என்ற  மகள் உள்ளார்.

    செல்வம்-அன்புக்கரசி தம்பதியினர் எடப்பாடி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான மாமர தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து, விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் செல்வத்திற்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. மாலை நேரம் ஆனதும் அவர் மது குடித்து விட்டு வீட்டிற்கு வருவதாக தெரிகிறது. இதனால் அன்புக்கரசி, அவரிடம் இப்படி மது குடிக்காதீர்கள். தோட்ட வேலையை கவனிங்கள் என்று கூறியுள்ளார்.

    ஆனால், செல்வம் மது குடிக்கும் பழக்கத்தை கைவிடவில்லை. பணத்தை  குடித்து செலவழித்து வந்தார். இதனால் கணவன்- மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. தொடர்ந்து செல்வம் மது குடித்துவிட்டு வந்து தோட்டத்தை சரியாக பராமரிக்காமல் இருந்ததால் வீட்டில் கடந்த 2 நாட்களாக சண்டை ஏற்பட்டுள்ளது.

    தினம் தினம் வீட்டில் நிம்மதி இல்லாமல் இருந்ததால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அன்புக்கரசி குழந்தையுடன் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில் மனைவியும், மகளும் காணாததால் செல்வம் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தார். இன்று ராஜேந்திரன் என்பவருடைய மாமர தோட்டத்தில் உள்ள கிணற்றில் அன்புக்கரசியும், குழந்தை கனிஷ்காவும் பிணமாக மிதந்தனர். அக்கம், பக்கத்தில் வசித்து வருபவர்கள் இது குறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து அன்புக்கரசி மற்றும் குழந்தை கனிஷ்கா ஆகியோர் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.  

    இது பற்றி போலீசார் கூறுகையில், அன்புக்கரசி தனது மகள் கனிஷ்காவை அழைக்குக் கொண்டு மாமர தோட்டத்திற்கு வந்துள்ளார். பின்னர் தனது மகளை தூக்கி நெஞ்சோடு இறுக்கி பிடித்துக் கொண்டு கிணற்றில் குதித்துள்ளார். இதனால்  தண்ணீரில் மூழ்கி தாயும், மகளும் பரிதாபமாக இறந்தனர். மேலும் பிரேத பரிசோதனைக்குப் பிறகு தான் முழு விபரங்களும் தெரியவரும் என்றனர்.
    கூடுவாஞ்சேரி அருகே கணவர் குடிப்பழக்கத்தை கைவிட மறுத்ததால் மனம் உடைந்த் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கம் அன்னை இந்திரா காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி(வயது33), இவரது கணவர் பழனி அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார். குடிப்பழக்கத்தை கைவிடுமாறு அவரது மனைவி வலியுறுத்தி வந்தார். ஆனால் அவர் குடிப்பழக்கத்தை கைவிட மறுத்துவிட்டார். இதனால் மனம் உடைந்த மனைவி ஜெயந்தி கடந்த 10-ந்தேதி வீட்டில் மண்எண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீவைத்துக்கொண்டார்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக ஜெயந்தி உயிரிழந்தார்.

    இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×